கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சார் பதிவாளர் இசக்கியப்பன் என்பவரிடம் கணக்கில் வராத 2 லட்சத்து 26 ஆயிரத்து 400 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.