கண்பார்வையை பாதிக்கும் ‘டிராக்கோமா’ நோய்த் தொற்றை முற்றிலும் ஒழித்து இந்தியா சாதனை படைத்திருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கிளமிடியா டிரக்கமாட்டீஸ் என்ற நுண்ணியிரி மூலம் ஏற்படும் ‘டிராக்கோமா’ நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்த் தொற்றை ஒழிக்க கடந்த 1964-ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. அந்த வகையில், கடந்த 2017-ஆம் ஆண்டில் ‘டிராக்கோமா’ நோய்த் தொற்றை ஒழித்துவிட்டதாக இந்தியா அறிவித்தது. இருப்பினும், 7 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின், உலக சுகாதார மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.