புதுச்சேரியில், அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கு கனமழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழையால், புஸ்ஸி வீதி, முல்லா வீதி உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல், சட்டப்பேரவை அருகே உள்ள அரசு பொது மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.