தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரிப் பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அதன்படி தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 173 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் 89 ஆயிரத்து 86 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டிய நிலையில், பண்டிகை மாதங்களை கணக்கில் கொண்டு, கூடுதலாக ஒரு மாத தவணையை சேர்த்து மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.
அதில் தமிழகத்துக்கு மட்டும் 7 ஆயிரத்து 268 கோடி ரூபாயை வரி பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது.