ஒய்வை அறிவித்தார்! : களிமண் தரையின் பாகுபலி!
Aug 3, 2025, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஒய்வை அறிவித்தார்! : களிமண் தரையின் பாகுபலி!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம்… 14 முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றி… அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் வீரர் என 20 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருந்த ஈடு இணையற்ற நாயகனான ரபேல் நடால் தன் ஓய்வை அறிவித்திருக்கிறார். அவரின் சாதனைப் பயணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்..!

ஸ்பெயினின் மல்லோர்கா பகுதியில் 1986ம் ஆண்டில் பிறந்த நடாலுக்கு சிறுவயதில் கால்பந்து ஆட்டத்தின் மீதே அதிக ஈர்ப்பு இருந்தது. எனினும் அவரிடம் இயற்கையாகவே இருந்த டென்னிஸ் ஆடும் திறனை கண்ட உறவினர் டோனி நடாலின் முயற்சியால் டென்னிஸ் உலகத்திற்குள் அழைத்து வரப்பட்டார் ரபேல் நடால். பிரெஞ்சு ஓபனை ஒருமுறையாவது வெல்ல வேண்டும் என்ற ரபேல் நடாலின் கனவு 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அர்ஜெண்டினாவின் மரியனோ பியோர்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றபோது நடாலுக்கு வயது 19 மட்டுமே.

அதன் தொடர்ச்சியாக 2006, 2007 என அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று ஹாட்ரிக்கை பதிவு செய்த ரபேல் நடால், 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தார்.

நடாலின் மிகப்பெரிய பலமே அவரது இடது கை ஆட்டம் தான். இயற்கையில் வலது கைப் பழக்கம் கொண்ட ரபேல் நடால் இடது கையில் டென்னிஸ் விளையாடுவது ஆச்சர்யம் என்றால் அவரது அசாத்தியமான ஆட்டம் அதிசயம்.

எப்படி ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு சென்று வின்னர் ஷாட் அடிக்கிறார் ? ஒவ்வொரு முறை காயத்திலிருந்தும் விரைவாக எப்படி மீண்டு வருகிறார் ? பல மணி நேரங்களையும் கடந்து அதே உத்வேகத்துடன் எப்படி நீடிக்கிறார் ? என ரபேல் நடாலின் விளையாட்டுத்திறனை கண்டு வியக்காதவர்களை கிடையாது.

20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் புல்தரை மைதானத்தில் சிறு சிறு தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும் களிமண் தரை மைதானத்தில் அவரை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்று சொல்லும் அளவிற்கு ஈடு இணையற்ற வீரராக வலம்வந்தார். டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகவும், எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் வீழ்த்தவே முடியாத வீரராகவும் வலம் வந்த ரோஜர் பெடரரின் சாதனையையும் தகர்த்தார் ரபேல் நடால்.

விம்பிள்டன் போட்டிக்கு ரோஜர் பெடரர் என்றால் பிரெஞ்சு ஓபன் போட்டி நடால் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பிரெஞ்சு ஓபன் போட்டியில் எவராலும் தகர்த்த முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ரபேல் நடால் வசம் ஏராளமான பட்டங்கள் உள்ளன.

களிமண் தரையில் நடால் ஆடிய போட்டிகளில் 99 சதவிகிதம் முடிவுகள் அவருக்கு சாதகமாகவே அமைந்திருக்கின்றன. அந்தளவிற்கு களிமண் தரையின் பாகுபலியாகவும், எவராலும் வீழ்த்தவே முடியாத அளவிற்கும் ரபேல் நடால் திகழ்ந்து வந்தார்.

காயமடைவது… ஓய்வெடுப்பது… கம்பேக் கொடுப்பது… கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவதையே ரிப்பீட் மோடில் செயல்படுத்திக் கொண்டிருந்தார் ரபேல் நடால். ஒவ்வொருமுறை காயத்திலிருந்து மீண்டு வரும் போதும் அது அவருக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் உத்வேகமாக இருந்தது.

இயற்கைக்கு மாறாக, காயங்களை கடந்து, ஜாம்பாவான் பெடரரை எதிர்கொண்டு, வயதை பொருட்படுத்தாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிக் கொண்டே இருந்த ரபேல் நடால் இன்றைய இளம் தலைமுறை டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல இனி வரும் தலைமுறைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வார்.

Tags: Rafael Nadal has announced his retirement
ShareTweetSendShare
Previous Post

90-வது ரஞ்சிக்கோப்பை! : தமிழ்நாடு – சவுராஷ்டிரா கிரிக்கெட் அணிகள் மோதல்!

Next Post

தீப விளக்குகளால் அம்மனின் உருவத்தை வரைந்த பக்தர்கள்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies