புவிசார் அரசியலில் புதுப்பாதை - இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!
Sep 5, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

Manikandan by Manikandan
Jan 17, 2026, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தொட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் நம்பகத் தன்மையற்ற சீனா ஆகியவற்றுக்கு எதிராக, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஆசிய வல்லரசான இந்தியாவுடன் ஜெர்மனி கை கோர்த்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியை அங்கீகரித்த முதல் நாடுகளின் குழுவில் இந்தியாவும் ஒன்று. 1951-ல் புதியதாக உருவாக்கப்பட்ட ஜெர்மனியுடன் தூதரக உறவுகளைத் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தியாவும் ஜெர்மனியும் தூதரக உறவுகளையும், வர்த்தகக் கூட்டாண்மையின் 25 ஆண்டுகளையும் கொண்டாடும் வேளையில், ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் இரண்டு நாட்கள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இது அதிபராகப் பதவியேற்றபிறகு ஃபிரெட்ரிக் மெர்ஸ் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம். பிரதமர் மோடியைப் ஃபிரெட்ரிக் மெர்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் இடம்பெயர்வு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் நிலையான வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்கள்குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டுள்ளது. முன்னதாக, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையேயான தொடர்பை வலியுறுத்தும் விதமாக, சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

2024-ல் மொத்த இருதரப்பு வர்த்தகம் 33.40 பில்லியன் டாலராக இருந்தது, இது ஒரு சாதனையாகும். இதில் ஜெர்மனி 18.31 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், இந்தியா 15.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும் ஏற்றுமதி செய்துள்ளன.

சர்வதேசஅளவில் இந்தியாவில் ஒன்பதாவது பெரிய முதலீட்டாளராக ஜெர்மனி திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் ஜெர்மனியின் முதலீடுகள் அதிகரித்துள்ளன.

இந்திய-பசிபிக் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு எனத் தரங் மற்றும் மிலன் போன்ற கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.

மேலும், இந்திய-பசிபிக் வரிசைப்படுத்தல் சுழற்சியின் ஒரு பகுதியாக ஜெர்மன் கடற்படையின் போர்க்கப்பலும், போர் ஆதரவுக் கப்பல்களும் இந்தியாவுக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான ஏற்றுமதி அனுமதி கட்டமைப்பைப் புதுப்பிக்கும் மசோதாவுக்குக் கடந்த செப்டம்பரில் ஜெர்மனி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் விமான மின்னணுவியல், சென்சார்கள், மின்னணுப் போர் மற்றும் பாதுகாப்புத் தகவல் அமைப்பு கூறுகள் ஆகியவற்றில் ஜெர்மனி இந்தியாவுடன் தொழில்நுட்ப பகிர்வை எளிதாக்கியுள்ளது. முக்கியமாக, இந்திய கடற்படையின் கடலுக்கடியில் போர் திறனை மேம்படுத்தும் ப்ராஜெக்ட்-75I இன் கீழ் 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெர்மனியின் டைப்-214 அடுத்த தலைமுறை (214NG) நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்திக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் 1921, 1926 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்ட வரலாற்றுத் தொடர்பின் தொடர்ச்சியாக இன்று ஹைடெல்பெர்க், ஹம்போல்ட், பெர்லின் மற்றும் பான் போன்ற பல முக்கிய ஜெர்மன் பல்கலைக்கழகங்களில், இந்திய செவ்வியல் மொழிகள் மற்றும் இலக்கியங்களுக்காகப் படிப்புகள் உள்ளன.

மூன்று ஆண்டுகளாகப் பொருளாதார மந்தநிலையில் சிக்கி, திறமையான தொழிலாளர்களையும் தீவிரமாகத் தேடி வந்த ஜெர்மனி, இந்தியர்களுக்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளது.

ஜெர்மனியில் 300,000க்கும் மேல் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். மேலும், ஜெர்மனியில் வசிக்கும் 50,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், கலாச்சாரத் தூதுவர்களாக மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் தேவையான தொழில்நுட்பத் திறன்களை வழங்கும் (brain banks ஆக செயல்படுகின்றனர்.

உறுதியான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) இருநாடுகளுக்கும் இடையே இல்லாதது, பல்வேறு நீண்ட காலத் திட்டங்களைத் திட்டமிடுவதையும் செயல்படுத்துவதையும் தாமதப்படுத்துகிறது.

ஜெர்மனியின் தொழிலாளர் ஒழுங்குமுறை வழிமுறைகள், அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடும் நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஜெர்மனியின் நிலைப்பாடும் வெவ்வேறாக உள்ளன.

ஷெங்கன் விசாக்களை வழங்குவதில் உள்ள செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்களும் நடைமுறைச் சிக்கல்களும் இருதரப்பு உறவைப் பாதிக்கின்றன.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், ஆழமான ஒத்துழைப்பை உருவாக்குவதில் இருநாடுகளும் நெருங்கி வந்துள்ளன.

Tags: Germany desiresGermany indiaINDIA UPDATEPM ModiIndiabjp indiatn bjpGermanyஜெர்மனி
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா கையில் வெனிசுலா – சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை மாறும் புவிசார் அரசியல்!

Next Post

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் – நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆய்வு!

Related News

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் : மழை குறைய வாய்ப்பு? – சிறப்பு தொகுப்பு!

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முடிவு – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies