ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை - ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை
Apr 21, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

Manikandan by Manikandan
Jan 16, 2026, 09:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய அரசுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராடும் மக்கள் கொல்லப்பட்டால் அதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்த நிலையிலும் 12,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடும் பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கும் ஈரானில், இஸ்லாமிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் இரண்டு வாரங்களைக் கடந்தும் தொடர்கிறது.

ஈரானில் தலைநகர் முதல் அனைத்து மாகாணங்களிலும், 200க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களிலும் மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.

1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியால் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர் ஷா-வின் மகனான ரெசா பஹ்லவியின் அழைப்புக்கு பிறகு ஈரானில் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

மக்கள் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடங்கியதில் இருந்தே நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைதொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இணைய முடக்கத்தின் போது, ​​போராட்டக்காரர்கள் காணொளிகளைப் பெறுவதற்கும் ஒருங்கிணைப்பு செய்வதற்கும், ஈரானில் நடக்கும் அடக்குமுறைகளை வெளி உலகத்துக்குக் கொண்டு சேர்க்கவும் ஸ்டார்லிங்க் மட்டுமே ஒரே வழியாக இருந்தது.

எனவே, ஸ்டார்லிங்க் டிஷ்களையும், உபகரணங்களையும் தேச விரோத உளவு சாதனங்களாக அறிவித்துள்ள ஈரான் அரசு, பல்வேறு இடங்களில் ஸ்டார்லிங்க் டெர்மினல்களைக் கைப்பற்றியுள்ளது. மேலும், தேசத்துரோக குற்றத்தின் கீழ் ஸ்டார்லிங்க்கை பயன்படுத்தியவர்களை கைது செய்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக் கிழமையும் “தீர்ப்பு நாள்” போல இருந்தாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தெருக்களில் திரண்டு முழக்கங்கள் மட்டுமே எழுப்பிய மக்களைக் குருவிகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்றனர்.

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கீழ் செயல்படும் துணை ராணுவமான பசிஜ் படையினர், குறுகிய தெருக்களுக்குள் நுழைந்து, குடியிருப்புவாசிகளையும் சுட்டுக் கொன்றனர்.

பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. பிணங்கள் “ஒன்றின் மேல் ஒன்றாக குவிக்கப் பட்டுள்ளன.

குடும்பங்களிடம் உடல்களை ஒப்படைப்பதற்கு முன்பாக கொன்ற தோட்டாக்களுக்கான கட்டணம் மற்றும் அரசுக்கான இழப்பீடு வசூலிக்கப்படுவதாகவும், கட்டாத குடும்பங்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி காண்போர் நெஞ்சை உலுக்கியுள்ளன. டெலிகிராம் சேனலான வாஹித் ஆன்லனில் 16 நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.

இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் சுமார் 600 மைல்கள் பயணம் செய்து இந்த வீடியோ அனுப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணவறை வளாகத்திற்குள் இரத்தக் கறை படிந்த ஆடைகளின் குவியல்களுடன், துப்பாக்கிச் சூடு மற்றும் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட காயங்களுடன் உடல்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒரு வீடியோவில் டெஹ்ரானின் காஹ்ரிஸாக் தடயவியல் மருத்துவ மையத்தில் அதிகளவிலான சடலங்கள் இருப்பதையும் பல குடும்பங்கள் துக்கத்துடனும் சடலங்களை அடையாளம் காண்பதிலும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

இன்னொரு வீடியோ, கருப்புப் பைகளில் பல சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் அதற்கு வெளியே உள்ள தெருவில் சடலம் இருப்பதையும் காட்டுகிறது.

மற்றொரு வீடியோவில் சேமிப்பு அறை ஒன்றில் பல உடல்கள் இருப்பதையும் ட்ரக் ஒன்றிலிருந்து இறந்தவர்களின் உடல்களைச் சிலர் வெளியே எடுப்பதையும் பார்க்க முடிகிறது.

இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இங்கிலாந்து அரசாங்கம் நம்புவதாகவும், ஆனால் அதைவிட அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுவதாக தெரிவித்தார்.

அந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. வேறு சில மதிப்பீடுகள் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 20,000 வரை இருக்கலாம் என்று கூறுகின்றன.

“இஸ்லாமிய குடியரசு பின்வாங்காது” எனத் தெரிவித்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் உத்தரவின் படியே இந்த மோசமான இனப் படுகொலைகள் நடந்து வருகிறது.

மிருகத்தனமான அரசுக்கு எதிராக வெறுங்கைகளுடன் போராடும் சொந்த நாட்டு மக்களையே கொல்லும் ஈவு இரக்கமற்ற இஸ்லாமிய அரசுக்கு எதிராக, ஈரான் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவும் என்று அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

Tags: ISLAMICprotestIranusTrumptensions
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

Next Post

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

Related News

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

சாத்தூர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பரப்புரை – சாலையோர உணவகத்தில் பூரி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies