கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி - கம்பீரமாக நடந்து வந்த காளை - திகைத்து நின்ற வீரர்கள்!
Sep 13, 2026, 11:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – கம்பீரமாக நடந்து வந்த காளை – திகைத்து நின்ற வீரர்கள்!

Manikandan by Manikandan
Jan 17, 2026, 06:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொதுகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் பாலமேடு ஜல்லிக்கட்டு இம்முறையும் சிறப்பாக நடத்தப்பட்டது. காலை முதலே மாடுபிடிவீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில் துணை முதலமைச்சரின் வருகைக்காக போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்கப்பட்ட நிலையில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறக்கப்பட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது.

இதனையடுத்து ஆட்டம் பாட்டத்துடன் அழைத்துவரப்பட்ட கோயில் காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, பின்னர் விழா கமிட்டியினர் சார்பில் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது அதனை பிடிக்காமல் மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஒதுங்கி நின்றனர்.

இரண்டாவது சுற்றில் களமிறக்கப்பட்ட நடிகர் சூரியின் காளை யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது, வெற்றி பெற்ற இவரது காளையை அனைவரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர். இதற்கிடையே யாரிடமும் பிடிபடாமல் வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய பில்கேட்ஸ் என்ற காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு , அதன் உரிமையாளருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது

தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுச்சுற்று முடிவில் அஜித், பிரபாகரன் ஆகியோர் தலா 16 காளைகளை அடக்கி சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து விழா கமிட்டியினர், அஜித் முதலிடம் பிடித்ததாக அறிவித்தனர். இதனையடுத்து அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 2வது இடம் பிடித்த பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன், 3வது இடம் பிடித்த கார்த்திக் ஆகியோருக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கோச்சடையை சேர்ந்த விக்கி என்பவரின் காளை கம்பீரமாக நடந்து வந்த நிலையில் அதனை நெருங்க முடியாமல் வீரர்கள் திகைத்து நின்றனர். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இந்த காளை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதே போல குலமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் காளை யாரிடமும் பிடிபடாததால் சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு டிராக்டர் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோல் 2வது இடம் பிடித்த கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனின் காளைக்கு, கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு வழங்கப்பட்டது.

Tags: avaniyapuram jallikattu 2026pongal 2026mattu pongal 2026'Pongalo Pongal'.madurai palamedu jallikattu2026 jallikattupalamedu jallikattu 2026alanganallur jallikattu 2026
Share
Tweet
SendShare
Previous Post

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

Next Post

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies