சுற்றுலாப்பயணிகள் வேதனை - வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
Aug 8, 2026, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

Manikandan by Manikandan
Jan 16, 2026, 08:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்களுக்கான சுங்கவரிக்கட்டணம் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுங்கவரிக் கட்டணத்தை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதில் காட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் இருந்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி செல்லும் இடமாகவும் கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு சுங்கவரிக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மலைக்கு செல்லக்கூடிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நிலையில், புதிய சாலைகளை போடவோ அல்லது இருக்கும் சாலைகளை செப்பனிடவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், முன்னறிவிப்பின்றி சுங்கவரிக்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் நாள்தோறும் பயணிக்கும் சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வேகமாக செல்ல முடியாத அளவிற்கு காட்சியளிக்கும் சாலைக்கு சுங்கவரியை உயர்த்துவது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. சுங்கவரியை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சாலைகளை சீரமைப்பதிலும் காட்ட வேண்டும் எனவும் உள்ளூர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்

Tags: TOLLGATEtamilnadukodaikanalTouristPeopletngovt
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

Next Post

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

Related News

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies