கவரப்பேட்டை ரயில் விபத்து - சீரமைப்பு பணி தீவிரம்!
Aug 4, 2025, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவரப்பேட்டை ரயில் விபத்து – சீரமைப்பு பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 12, 2024, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மோதி விபத்து நேரிட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில், தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு-தர்பங்கா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மீது மோதியது. இதில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான சில ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும் முன்வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல்களை அறிய அவசர உதவி எண்களையும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 044 – 2535 4151, 044 – 2435 4995 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கி சேதமடைந்த 10-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள், மின்சார வழித்தடம், ரயில்வே சிக்னல்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர், விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே மைசூர் – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் விபத்தில் சிக்கியதற்கான காரணம் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே தெரிய வரும் என, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில், தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் மீட்பு பணியில் ஏற்பட்ட தொய்வு குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எம்.சௌத்ரி, முழுமையான ஆய்வுக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் எனக் கூறினார்.

Tags: Kavaraipettaitrain accidentAndhra PradeshNational Disaster Response ForceKavarappettaiMysuru-Darbanga Express
ShareTweetSendShare
Previous Post

தொழில்நுட்ப கோளாறு, சுமார் 2 மணி நேரம் வானில் பறந்த விமானம் – திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies