கவரப்பேட்டை ரயில் விபத்து - சீரமைப்பு பணி தீவிரம்!
Sep 18, 2025, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவரப்பேட்டை ரயில் விபத்து – சீரமைப்பு பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 12, 2024, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மோதி விபத்து நேரிட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில், தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு-தர்பங்கா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மீது மோதியது. இதில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான சில ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும் முன்வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல்களை அறிய அவசர உதவி எண்களையும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 044 – 2535 4151, 044 – 2435 4995 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கி சேதமடைந்த 10-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள், மின்சார வழித்தடம், ரயில்வே சிக்னல்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர், விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே மைசூர் – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் விபத்தில் சிக்கியதற்கான காரணம் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே தெரிய வரும் என, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில், தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் மீட்பு பணியில் ஏற்பட்ட தொய்வு குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எம்.சௌத்ரி, முழுமையான ஆய்வுக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் எனக் கூறினார்.

Tags: KavarappettaiMysuru-Darbanga ExpressKavaraipettaitrain accidentAndhra PradeshNational Disaster Response Force
ShareTweetSendShare
Previous Post

தொழில்நுட்ப கோளாறு, சுமார் 2 மணி நேரம் வானில் பறந்த விமானம் – திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies