கவரப்பேட்டை ரயில் விபத்து - சீரமைப்பு பணி தீவிரம்!
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவரப்பேட்டை ரயில் விபத்து – சீரமைப்பு பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மோதி விபத்து நேரிட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில், தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு-தர்பங்கா விரைவு ரயில், எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் மீது மோதியது. இதில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான சில ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் துரித கதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும் முன்வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல்களை அறிய அவசர உதவி எண்களையும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, 044 – 2535 4151, 044 – 2435 4995 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கி சேதமடைந்த 10-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள், மின்சார வழித்தடம், ரயில்வே சிக்னல்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர், விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே மைசூர் – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் விபத்தில் சிக்கியதற்கான காரணம் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே தெரிய வரும் என, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில், தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் மீட்பு பணியில் ஏற்பட்ட தொய்வு குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எம்.சௌத்ரி, முழுமையான ஆய்வுக்குப் பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் எனக் கூறினார்.

Tags: KavarappettaiMysuru-Darbanga ExpressKavaraipettaitrain accidentAndhra PradeshNational Disaster Response Force
ShareTweetSendShare
Previous Post

தொழில்நுட்ப கோளாறு, சுமார் 2 மணி நேரம் வானில் பறந்த விமானம் – திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

Next Post

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies