சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு - சிறப்பு கட்டுரை!
Aug 17, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 08:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, திறமையாக செயல்படாதவர்கள் மற்றும் ஊழல் கறை உள்ளவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு மத்திய துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், பாஜக அனைத்து கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது.

ஹரியானாவில் தொடர்ந்து பத்தாண்டு கால ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடித்து வரலாற்று சிறப்புமிக்க ஹாட்ரிக் வெற்றியைப் பாஜக பெற்றுள்ளது.

அதே போல், 370- சட்ட பிரிவை நீக்கிய பின் நடந்த முதல் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில், அதிக வாக்கு சதவீதத்துடன் 29 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்த இருமாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு நாளுக்குப் பிறகு கடந்த புதன் கிழமை மத்திய அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடனான கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடை பெற்றது.

தங்கள் குறைகள் உடனடியாக தீர்க்கப்படுவதால் பாஜக ஆட்சியின் மீதான நம்பிக்கை பொதுமக்களுக்கு அதிகரித்துள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் மக்கள் குறைகள் உட்பட 4.5 கோடி கடிதங்கள் பிரதமர் அலுவலகத்து வந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், வெறும் 5 லட்சம் புகார் கடிதங்களே அரசுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கான முயற்சிகள் பொதுமக்களால் அங்கீகரிக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே, ஹரியானாவில் வெற்றியும், ஜம்மு காஷ்மீரில் அதிகமான வளர்ச்சியும் பாஜகவுக்கு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதனால், அரசு அலுவலகங்களில் மேஜைக்கு மேஜை, கோப்புக்கள் தள்ளப்பட்டு,தேங்கி கிடக்காமல், பொதுமக்களின் குறைகளை முழுமையாகவும், விரைவாகவும் நிறைவேறுவதை உறுதி செய்யுமாறு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வாரத்துக்கு ஒரு குறிப்பிட்ட நாளை கட்டாயம் ஒதுக்குமாறு துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி, அமைச்சர்கள் இந்த செயல்முறையை மேற்பார்வையிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தகுதியற்ற ஊழியர்களை ஓய்வு பெற அனுமதிக்கும் விதிகளைச் சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, தொடர்ச்சியான மக்கள் சேவைக்குத் தகுதியற்றதாகக் கருதப்படும் எந்தவொரு அரசு ஊழியரையும் பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசின் மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதியம் விதிகளின் அடிப்படை விதி 56 (j), அரசின் நிர்வாகத்தில் அதிக செயல்திறனை உறுதி செய்வதற்காக, அரசு ஊழியர்களின் முன்கூட்டிய ஓய்வுக்கான வழிகாட்டுதல்களைக் கூறுகிறது .

அதன் படி, 50 முதல் 55 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்களின் செயல்திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டு, திறமையின்மை கண்டறியப்பட்டால், நியமன அதிகாரி, அந்த அரசு ஊழியரைப் பொதுநலன் கருதி, பதவியிலிருந்து நீக்க முடியும்.

கூடுதலாக, 48 வது விதியின் படி, 30 ஆண்டுகளாக அரசு பணியிலிருக்கும் ஒரு ஊழியரின் பணி மதிப்பீட்டின் அடிப்படையில், நியமன அதிகாரி, அவரை “பொது நலன்” கருதி பதவி நீக்கலாம்.

திறனற்ற அரசு ஊழியருக்கு,மூன்று மாத முன் அறிவிப்பு அல்லது மூன்று மாத ஊதியம் மற்றும் படிகளை வழங்க வேண்டும் என்றும் அரசு விதிகள் சொல்கின்றன

மேலும், அரசு ஊழியர்களின் மறுஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, 50 வயதிலிருந்து 55 வயதை அடையும் வரை அல்லது 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணி முடித்த அரசு ஊழியர்களின் திறன் பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் துறை ரீதியாக பதிலளிக்கவும், இந்த பணி நீக்க உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்லவும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதியம் விதிகளைப் பயன்படுத்தி இதுவரை 500க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு அரசுத் துறைகள் கட்டாய ஓய்வு அளித்திருக்கின்றன.

அரசு ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கவும், அரசு விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி வலியறுத்தியுள்ளார்.

Tags: central governmentprime minister modierformance of civil servantsremove inefficient and corrupt officials
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச மகாகாளி கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு – விசாரணை தீவிரம் – சிறப்பு கட்டுரை!

Next Post

சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை – கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!

Related News

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies