சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!
Jul 29, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை – கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!

Murugesan M by Murugesan M
Oct 14, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கன மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கிச்சிபாளையத்தில் உள்ள கருவாட்டு பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் , குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. இதேபோல், பச்சைப்பட்டி, பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. அத்துடன், பல பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.

கோவை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில், சங்கனூர் அருகே சிவானந்த காலனி சாய்பாபா கோயில் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கியது. அப்போது, பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மழைநீரில் சிக்கி மூழ்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு நீர் புகுந்ததால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று, பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரெனால்ட்ஸ் ரோடு ஐயப்பன் கோயில் அருகேயும், பாதாள சாக்கடை பள்ளத்தில் மற்றொரு அரசு பேருந்து சிக்கிக்கொண்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் தொகுதியில் பாதாள சாக்கடை பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஒரே நாளில் 2 பேருந்துகள் சிக்கிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: rain warningcoimbatore rainheavy rainrain alertweather updatetamilnadu rain. metrological center
ShareTweetSendShare
Previous Post

சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு – சிறப்பு கட்டுரை!

Next Post

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies