சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை – கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!

Murugesan M by Murugesan M
Oct 14, 2024, 09:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கன மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கிச்சிபாளையத்தில் உள்ள கருவாட்டு பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் , குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. இதேபோல், பச்சைப்பட்டி, பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. அத்துடன், பல பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.

கோவை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில், சங்கனூர் அருகே சிவானந்த காலனி சாய்பாபா கோயில் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கியது. அப்போது, பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மழைநீரில் சிக்கி மூழ்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு நீர் புகுந்ததால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று, பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரெனால்ட்ஸ் ரோடு ஐயப்பன் கோயில் அருகேயும், பாதாள சாக்கடை பள்ளத்தில் மற்றொரு அரசு பேருந்து சிக்கிக்கொண்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் தொகுதியில் பாதாள சாக்கடை பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஒரே நாளில் 2 பேருந்துகள் சிக்கிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: rain warningcoimbatore rainheavy rainrain alertweather updatetamilnadu rain. metrological center
Share
Tweet
SendShare
Previous Post

சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு – சிறப்பு கட்டுரை!

Next Post

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies