சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!
Sep 18, 2025, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை – கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கன மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கிச்சிபாளையத்தில் உள்ள கருவாட்டு பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் , குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. இதேபோல், பச்சைப்பட்டி, பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. அத்துடன், பல பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.

கோவை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில், சங்கனூர் அருகே சிவானந்த காலனி சாய்பாபா கோயில் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கியது. அப்போது, பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மழைநீரில் சிக்கி மூழ்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு நீர் புகுந்ததால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று, பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரெனால்ட்ஸ் ரோடு ஐயப்பன் கோயில் அருகேயும், பாதாள சாக்கடை பள்ளத்தில் மற்றொரு அரசு பேருந்து சிக்கிக்கொண்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் தொகுதியில் பாதாள சாக்கடை பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஒரே நாளில் 2 பேருந்துகள் சிக்கிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: rain warningcoimbatore rainheavy rainrain alertweather updatetamilnadu rain. metrological center
ShareTweetSendShare
Previous Post

சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு – சிறப்பு கட்டுரை!

Next Post

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies