சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!
Aug 4, 2025, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை,சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை – கோவை ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய தனியார் பேருந்து!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கன மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே பரவலாக மழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கிச்சிபாளையத்தில் உள்ள கருவாட்டு பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் , குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. இதேபோல், பச்சைப்பட்டி, பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. அத்துடன், பல பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.

கோவை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில், சங்கனூர் அருகே சிவானந்த காலனி சாய்பாபா கோயில் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கியது. அப்போது, பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மழைநீரில் சிக்கி மூழ்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக, சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு நீர் புகுந்ததால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று, பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரெனால்ட்ஸ் ரோடு ஐயப்பன் கோயில் அருகேயும், பாதாள சாக்கடை பள்ளத்தில் மற்றொரு அரசு பேருந்து சிக்கிக்கொண்டது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் தொகுதியில் பாதாள சாக்கடை பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஒரே நாளில் 2 பேருந்துகள் சிக்கிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: heavy rainrain alertweather updatetamilnadu rain. metrological centerrain warningcoimbatore rain
ShareTweetSendShare
Previous Post

சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு – சிறப்பு கட்டுரை!

Next Post

கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies