அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? பாமக நிறுவனர் ராமதாஸ்
Nov 11, 2025, 11:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? பாமக நிறுவனர் ராமதாஸ்

Web Desk by Web Desk
Oct 14, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும் அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ என்றும், இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள். சனிக்கிழமை இரவு முதல் பெய்த கோவை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை மாநகரத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மழை பெய்தால் விரைவாக வடியும் வகையில் மழைநீர் வடிகால்களும், மழை நீரைக் கடத்திச் செல்லும் பாசனக் கால்வாய்களும் தூர்வாரப்படாதது தான் காரணம் ஆகும்.

மதுரை மாவட்டம் மேலூரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த இராமநத்தம் பகுதியில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் குமரேசன் என மொத்தம் 4 பேர் நேற்று ஒரே நாளில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ளனர்.

மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகச்சாதாரணமான பராமரிப்புப் பணிகளைக் கூட மேற்கொள்ளாமல் தமிழக அரசும், மின்சார வாரியமும் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கு மிகவும் வேதனையான எடுத்துக்காட்டு தான் இந்த உயிரிழப்புகள். இவை அனைத்துக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது தலைமைச் செயலாளர் என தமிழக அரசு நிர்வாகம் பல முறை பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனும், பிற அதிகாரிகளுடனும் கலந்தாய்வுகளை நடத்தினார்கள்.

அவை அனைத்தும் பெயரளவிலான செயல்பாடுகளாகவே உள்ளன என்பதும், களத்தில் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதும் சில மணி நேரம் பெய்த லேசான மழையிலேயே அம்பலமாகியுள்ளது. இது தான் வட கிழக்கு பருவமழையை தமிழக அரசு எதிர்கொள்ளும் அழகு என்றால் அடுத்து வரும் நாட்களை எண்ணி அஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.

வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது. 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரம் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ளுமோ, சென்னை மாநகர மக்கள் எத்தகைய இன்னல்களையெல்லாம் எதிர்கொள்வார்களோ? என்ற அச்சமும், கவலையும் மனதை வாட்டுகின்றன.

சென்னை மாநகரில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. 45-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு வரை முடிக்கப்படவில்லை. மழை – வெள்ளத்தை எதிர்கொள்ள படகுகள், நீர் இறைக்கும் கருவிகள் ஆகியவை மிகவும் அவசியம் தான் என்றாலும் கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.,

Tags: tamilnadu rain. metrological centerrain warningheavy rainrain alertweather updateramadosspmk founder
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர், சிவகாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Next Post

சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாகமதி விரைவு ரயில் என்ஜின்!

Related News

அமெரிக்காவில் பணியாளர் பற்றாக்குறை – 3000 விமானங்கள் ரத்து!

சீனா : அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!

நெல்லை : அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – அதிபர் டிரம்ப்

அரியலூர் : லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் – தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

உருவகேலி செய்த யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன் – நடிகை கவுரி கிஷன்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies