பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான இரண்டாவது நபருக்கு 18 வயதை கடந்தவரா என்பதை கண்டறிய, அவருக்கு எலும்பு பரிசோதனை மேற்கொள்ளுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான பாபா சித்திக் மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு டெல்லியின் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் காவலில் எடுப்பதற்காக போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது 2-வது குற்றவாளியாக கைதான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபர், 18 வயதை கடந்தவரா என்பதை கண்டறிவதில் குழப்பம் நீடித்தது. அதனடிப்படையில், அவருக்கு எலும்பு பரிசோதனை செய்து அவரது வயதை கண்டறியும்படி போலீசாருக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.