தீப்பெட்டி தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீன இறக்குமதி லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், அந்த லைட்டர்களின் இறக்குமதியை முற்றிலுமாக தடை செய்யுமாறு அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், தீப்பெட்டித் தொழிலை பாதிக்கும் சீன இறக்குமதி லைட்டர்களின் உதிரி பாகங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.