தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் பருவமழை மிரட்ட தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்…
மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி ஆற வைத்த பிறகே அருந்த வேண்டும்
முன்கூட்டியே தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் வெளிச்சம் வழங்க உதவும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளை முன்கூட்டியே வாங்கி வைத்திருக்க வேண்டும்..
வீட்டில் உள்ள மின்விளக்குகளை கவனமுடன் கையாள்வதோடு உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனடியாக மாற்றுவது விபத்தை தவிர்க்க உதவும்
சூப், ரசம், பால், டீ, காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்துவது உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும்
அரசு வெளியிடும் இயற்கை பேரிடர் சார்ந்த அவசர எண்களை குறித்து வைத்துக்கொள்வது நல்லது
மொபைல் போன்களுக்கான பவர் பேங்க் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சார்ஜ் செய்ய வேண்டும்.
எமர்ஜென்சி விளக்குகளுக்கும் போதிய அளவு சார்ஜ் செய்து வைப்பது நலம்.
மழைக் காலங்களில் செய்யக்கூடாதவை என்னவென்றால் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்
மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அதன் அருகில் இருக்கும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
மழையின் போது வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால் மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரங்களுக்கு கீழ் நிற்க கூடாது.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.