தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை முழுவதுமாக நிறைவுபெற்று, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.