சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 16 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து பெங்களுரூ, அந்தமான், டெல்லி மற்றும் மஸ்கட்டிற்கு செல்லும் 4 விமானங்களும், இதேபால், அங்கிருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்கள் என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய 14 விமானங்கள் தாமதாகியுள்ளது.
கனமழை காரணமாக விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதால், பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர மற்ற விமானங்கள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.