மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும்,
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வரும் 22-ம் தேதி தொடங்கி, 29 -ம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 30-ம் தேதி நடைபெறும் என்றும், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்,
என்றும் கூறினார். மேலும், பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படும் எனவும் தெரிவித்தார்.
நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் ஜார்க்கண்ட மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 18-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடையும் தெரிவித்த அவர், வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் 28-ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.
மேலும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ல் தொடங்கி 29-ல் நிறைவடையும் என்றும்,
வேட்பு மனு மீதான பரிசீலனை வரும் 30 தேதி நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஒட்டுமொத்த தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ல் நடைபெறும் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.