ஹரியானாவில் மீண்டும் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநரிடம் நயாப் சிங் சைனி உரிமை கோரினார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக தேர்வானது.
இந்த நிலையில், சண்டீகரில் ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி அம்மாநில முதலமைச்சர் நயப் சிங் சைனி ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, மனோகர்லால் கட்டார், தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். ஹரியானா முதலமைச்சராக நயாப் சிங் சைனி நாளை பதவியேற்கிறார்.