கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, நீதியை சரிசமமாக வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்தில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. பாகுபாடின்றி நீதி வழங்குவதை குறிக்கும் விதமாக சிலையின் கண்கள் கருப்பு துணியால் கட்டப்பட்டும், அநீதியை வீழ்த்துவதை குறிக்கும் விதமாக கையில் வாளுடனும் நீதி தேவதை காட்சியளித்தது.
இந்நிலையில், நீதி தேவதையின் சிலை மாற்றம் செய்யப்பட்டு தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது, கண்கள் திறக்கப்பட்டும், அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடியும், தலையில் கிரீடம், நெற்றித் திலகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.