ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள நயப் சிங் சைனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “ஹரியானா முதலமைச்சராகப் பதவியேற்ற நயப் சிங் சைனி மற்றும் அவருடன் அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த அணி நல்ல ஆளுகை மற்றும் அனுபவத்தின் தனித்துவமான சங்கமமாகும்.
இது இங்குள்ள மக்களின் கனவுகளை நனவாக்குவதுடன் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சேவை செய்வதில் இரட்டை என்ஜின் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.