செங்கல்பட்டு அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 நெல் மூட்டைகள் திருட்டு போன அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலுமிச்சம்பட்டு கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செயல்பட்டு வந்தது.
இங்க நெல் கொள்முதல் செய்யப்படுவதில் திமுக ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணனின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 200 நெல் மூட்டைகள் இரவோடு இரவாக களவு போன சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை மாவட்ட ஆட்சியிர் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.