சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றவந்த அதிகாரிகளை கண்டித்து குடியிருப்புவாசிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
யானை சாலை ஊரணி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 32 வீடுகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் முற்பட்ட நிலையில், அவர்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.