தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும் ஓய்வுபெற்றுள்ள நிலையில் எந்த தகுதியின் அடிப்படையில் சுனில் குமார் நியமிக்கப்பட்டார் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த நிலையில், மனு மீது அக்டோபர் 25ம் தேதிக்குள் மத்திய – மாநில அரசுகளும், சுனில்குமாரும் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.