சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள வனச்சாலை வழியாக சென்ற காரை, ஒற்றை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள வனப்பகுதிக்குள், பண்ணாரியில் இருந்து காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வாடிக்கை.
இந்நிலையில், திம்பத்தில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை வழியே ஒற்றை யானை இரவு நேரத்தில் உலாவியது. அவ்வழியாகச் சென்ற ஒரு கார் ஓட்டுநர் யானையை கண்டதும் காரை நிறுத்தினார். அப்போது காட்டு யானை காரை நோக்கி ஓடி வந்து தாக்க முயன்ற நிலையில், கார் ஒட்டுநர் சாமர்த்தியமாக பின்னோக்கி காரை நகர்த்தினர்.
இந்நிலையில், காட்டுப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் காரை நிறுத்தவோ, விலங்குகளை புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.