ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட சம்பவம் போர் முடிவதற்கான துவக்கப் புள்ளி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
சின்வார் கொலை ஹமாஸ் வீழ்ச்சியில் மிக முக்கிய மைல்கல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு யாஹ்யா சின்வார் மூளையாக செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.
இவர் தற்போது கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.