சென்னை ஓட்டியம்பாக்கம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து ஓட்டுநரை பிடித்து காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் ஏற முயன்ற பெண் பயணி கீழே விழுந்துள்ளார். பின்னர் பேருந்தில் ஏறிய பெண் பயணி ஓட்டுநரை திட்டியதாகவும், அதற்கு அவர் அந்த பெண்ணை ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி, ஓட்டுநர் மன்னிப்பு கேட்கக்கோரி பேருந்தை வழிமறித்து நின்றுள்ளார். ஆனால், ஓட்டுநர் தேவராஜ் அதனை பொருட்படுத்தாமல் பேருந்தை இயக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இருசக்கர வாகனத்தில் பேருந்தை துரத்தி சென்று வழிமறித்தும், அவர் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.