சென்னை மடிப்பாக்கம் பகுதியில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள சிவன் கோயில் அருகே இருக்கும் காலியிடங்களில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுகின்றன.
இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாய சூழல் நிலவுதாகும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.