மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் அதிகமுள்ள துறைகளாக சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளை இந்தியா சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இத்துறைகளில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் மற்றும் கல்வி நிறு-வனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து, மெக்சிகோ நிறுவனங்கள் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வணிக நட்புக் கொள்கைகளை, மெக்சிகன் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.