நெல்லையில் கந்துவட்டி பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சி.என்.கிராமத்தை சேர்ந்த சாவித்திரி என்ற மூதாட்டி அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். அவர் சொந்த தேவைக்காக காளிமுத்து என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாவித்திரியின் வீட்டுக்கு சென்ற காளிமுத்து மற்றும் அவரது சகோதரர் ஆனந்தராஜ் ஆகியோர், அவரிடம் வட்டிப் பணம் தருமாறு கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காளிமுத்து மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர் .