ஈரோட்டில் பள்ளி மாணவிகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் இறக்கிவிட்டு சென்றதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடம்பூரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் மாக்கம்பாளையம் என்ற மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்கு அடர்ந்த வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில் கடம்பூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகள், பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் ஏறினர். அப்போது மாணவிகளை மாக்கம்பாளையம் வரை அழைத்து செல்லாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் பேருந்து ஓட்டுநர் இறக்கி விட்டுள்ளார். இதனால் அச்சமடைந்து மரத்துக்கு அடியில் ஒதுங்கிய மாணவிகளை மலை கிராமத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டனர்.