வங்கக்கடலில் அக்டோபர் 22ம் தேதிக்கு பதிலாக 21ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 14ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையின் வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. அக்டோபர் 17-ஆம் தேதிசென்னைக்கு அருகே எண்ணூரையொட்டி கரையை கடந்தது.
இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் அக்டோபர் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 22ம் தேதிக்கு பதிலாக, 21ம் தேதி தாழ்வுப்பகுதி உருவாகும் என தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.