திருவள்ளூரில் மழை ஓய்ந்த பின்பும் விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, அழிஞ்சிவாக்கம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மழை ஓய்ந்து 3 நாட்கள் கடந்த பின்பும் வெள்ளம் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போதுமான வடிகால் வசதிகள் இல்லாததும், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் தான் மழைநீர் வெளியேறாமல் இருப்பதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.