அயோத்தியில் இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், தீபோத்ஸவ் எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார்.
அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. கடந்த ஆண்டு 22 லட்சத்து 23 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த நிலையில், இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்கு அயோத்தியில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.