மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி எம்.ஜி.எம் புற்றுநோய் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
நுங்கம்பாக்கத்தில் இருந்து அண்ணா நகர் வரை நடைபெற்ற நடைபயணத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிங்க் நிற உடையில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஜி.எம் புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் ராஜா, மார்பக புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிய, வயதுக்கு வந்த பெண்கள் மார்பகங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதேபோல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தில்லைநகர் வரையிலான விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.