ராஜஸ்தானில் டெம்போ மீது பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்,
குவாலியரில் இருந்து ஜெய்புட் நோக்கி பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. சுமிபூர் அருகே சென்ற டெம்போ மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில், 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.