ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், 13 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் 240 குதிரை திறன் கொண்ட இயந்திர விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க செல்ல அனுமதிக்க கூடாது என புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், 240 குதிரை திறன் கொண்ட இயந்திர விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்து திரும்பிய காவினஷ் மற்றும் பெனிட்டோ ஆகிய இருவருடைய படகுகளில் உள்ள வலைகளை மீன்வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனை கண்டித்து மீனவ சங்க தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.