சென்னை OMR சாலையில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
கந்தன்சாவடி பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக 18 மற்றும் 19ம் தேதிகளில் கணபதி ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், ஓஎம்ஆர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.