மெரினா கடற்கரையிலுள்ள லூப் சாலையில் ரோந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தம்பதி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த தம்பதியிடம் போலீசார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு காவல்துறையினரை ஒருமையில் பேசிய காரின் உரிமையாளர், தாம் மது அருந்தியுள்ளதாகவும், தமக்கு உதயநிதி ஸ்டாலினை தெரியும் எனவும் மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் தம்பதி குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.