யூ-டியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்கக்கோரி யூ-டியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
யூ-டியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டியதை வீடியோ எடுத்து தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் யூ-டியூபில் வெளியான அந்த வீடியோவை நீக்க வலியுறுத்தி, யூ-டியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், யூ-டியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் மருத்துவத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.