ஏர் இந்தியா விமானத்தில் அடுத்த மாதம் 1 முதல் 19-ஆம் தேதி வரை யாரும் பயணிக்க வேண்டாமென கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவர நினைவு தினத்தையொட்டி, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏர் இந்தியா விமானம் தாக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டும் பன்னுன் எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த சில தினங்களாக விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வந்த நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.