சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கைதி உயிரிழந்தார்.
பத்தனம்திட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி என்பவர், போதைப் பொருள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது கேரள மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கேரள சிறையில் இருந்தபடி போதைக் கும்பலை வழிநடத்தியதால் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.