மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடவடிக்கை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா ஷிண்டே பிரிவு கூட்டணி ஆட்சி நடைபெறும் சூழலில், அதிகாரத்தை தக்கவைப்பதில் அந்தக் கூட்டணி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஓரிரு தினங்களுக்குள் முன் 99 பேர் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூர் (தென் மேற்கு), மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே கம்தி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வரும் 29-ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி தினம் என்றும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.