தேனி மாவட்டம் வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை, அரசரடி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் மூல வைகையில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் வருசநாடு, செங்குன்றம், மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மூல வைகையாற்று நீர், முல்லைப்பெரியாற்று நீருடன் கலந்து வைகை அணைக்கு செல்கிறது. மழைப்பொழிவு காரணமாக வைகையில் நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.