சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் முருகானந்தம் தரப்பில், பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக பல்வேறு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் வெளியிட அனுமதியளித்தார். மேலும், கடைகளுக்கு தேவையான மின்சாரம், சிசிடிவி வசதி, தீயணைப்பு வசதி மற்றும் பார்க்கிங் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.