மகாராஷ்டிராவில் 6 முதல் 23 மாதங்கள் வரையிலான 80 சதவீத குழந்தைகளுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அளிக்கப்படுவதில்லை என உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நான்கில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் போன்ற 8 வகை உணவுகளை சேர்ப்பது அத்தியாவசியமாகிறது.
ஆனால், மகாராஷ்டிராவில் 6 முதல் 23 மாதங்கள் வரையிலான 80 சதவீத குழந்தைகளுக்கு, இந்த 8 வகை உணவுகளில் 5-ஐ விட குறைவான அளவிலேயே ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அளிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், மிக சிறிய வயதுடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதுடன், பல்வேறு உடல்நல பாதிப்புகளும் எளிதில் ஏற்படுகின்றன.
மகாராஷ்டிராவை போலவே, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.