கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 2 கார்கள் அடித்து செல்லப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஏழு எருமை பள்ளம் என்ற நீரோடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, நீரோடையை கடக்க முயன்ற 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கின. காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பின்னர் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.