சங்கரன்கோவிலில் பெய்த கனமழையால், சங்கரநாராயண சுவாமி கோயிலில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில்
ஐப்பசி திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது. 5ஆம் நாள் நிகழ்வில், ரத வீதியுலா நடைபெறவிருந்த நிலையில், திடீரென கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால், கோயிலின் உள்பிரகாரங்களில் மழைநீர் புகுந்ததால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனிடையே, சங்கரன்கோயிலில் சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்தது. இதனால், வாகனஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர்.